தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விலகிக் கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சாரக்கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார் என்பது தெரிந்த விடயமாகும்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவற்றில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் இறுதிப் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தும் வழக்கத்தையும் தேசிய மக்கள் சக்தி இம்முறை கைவிட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி சார்பில் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.