நாளை (04) பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் கவனம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, நாளை (04) வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு அதிகமாக காணப்படுகின்றது. அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது, எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகின்றது.
ADVERTISEMENT