கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது பற்றி கலந்துரையாடலை தமிழரசுக் கட்சியின் குறித்த கானொளியை வைத்து சித்தரிக்கப்பட்டு பொய்யான பிரச்சாரங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். இது உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாநகரசபை வேட்பாளராக போட்டியிடும் கந்தசாமி செல்வராசா தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (02 )இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் “நாங்கள் எப்போதும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தான் இருக்கிறோம். தொடர்ந்தும் எங்கள் சின்னம் வீட்டுச் சின்னமே இம் முறை திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியானது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூன்று ஆசனங்களை கைப்பற்றும். இவ்வாறான போலியான கானொளிகளைப் பரப்பி வாக்குகளை பெற எத்தணிக்கின்றனர். இதனை மறுதலிக்கின்றேன் எனவும் மேலும் தெரிவித்தார்.