“உரிமைகளை இழந்து வருகிறோம். இன்று மலையக அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கம் அதன் தலைவர்கள் வாக்கு வேட்டைக்கு ஒன்றுபட்டு உள்ளனர். ஆனால் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்க ஒன்று படுவதில்லை” என செல்லையா சிவசுந்தரம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதன் செயலாளர் எஸ்.ஏ.தேவேந்திரகுமாரி மற்றும் பிரதம ஆலோசகர் மேனகா கந்தசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந் நிகழ்வானது காலை 11 மணிக்கு ஹட்டன் மல்லிப்பூச் சந்தியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக ஹட்டன் நகர சபை மண்டபத்திற்கு மேனகா கந்தசாமி மற்றும் கட்சியின் செயலாளர் தேவேந்திர குமாரி தலைமையில் கோஷங்கள் எழுப்பிய வன்னம் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





