நற்பிட்டிமுனை பிரின்ஸ் பாலர் பாடசாலையில் சுமார் 50 மேற்பட்ட மாணவர்கள் வருடா வருடம் தனது பாலர் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் அடிப்படை தேவையாக மிக நீண்ட காலமாக மின்சார இணைப்பு காணப்பட்டது. இந்தக் கோரிக்கையினை நிவர்த்தி செய்யுமுகமாக YWMA அனுசரணையில் இம் மின்சார இணைப்பினை கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் இதனை குறுகிய நாளில் ஏற்பாடு செய்து வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வினை பிரின்ஸ் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் MM.றியாஸ் அவர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் பிரின்ஸ் பாலர் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










