தீவிரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியதாவது
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பரபரப்பான பகுதியில் பதற்றம் நிகழ்வது, கவலையளிக்கிறது.
இந்த இரு நாடுகளிலும் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். பெரிய போருக்கு வழிவகுக்காத வகையில், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலளிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும், பாகிஸ்தான் பொறுப்புடன், தங்கள் நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளை அழிக்க இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.