இன்று திருகோணமலையில் பிக்குவின் பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் இளைஞன் ஒருவன் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளான்.
திருகோணமலையில் தமிழர் தாயகத்தைத் திட்டமிட்டு பௌத்தமயமாக்கும் நோக்கில் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பிக்கு, பெரியகுளம் பொலிசாருக்கு வழங்கிய பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் சிந்துஜன் என்ற தமிழ்த் தேசிய பற்றுக் கொண்ட இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளான்.
மேலும் நபரை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
பொலிஸாரது இந்த அடாவடியான இனவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். மேலும் சிங்கள இனத்தவரின் இழிவான செயலால் தமிழ் இளைஞன் பாதிக்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்க விடயமாகும்.