நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அக்கராயன் வட்டாரத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் தட்சணாமூர்த்தி முரளி அவர்களை ஆதரிக்கும் வகையிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றைய தினம் கந்தபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
கட்சியின் ஆதரவாளர் சிறீபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் முதன்மை உரையினை ஆற்றியிருந்தார்.
அதேவேளை, மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் மற்றும் போதகர் சிவலிங்கம் சாம்சன், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் சுந்தரமூர்த்தி தயாபரன், வேட்பாளர்களான தட்சணாமூர்த்தி முரளி, நாகேந்திரம் செல்வநாயகம், சிவயோகலக்சுமி சந்திரபோஸ், சிவலிங்கம் பிறின்ஸ் சிந்துஜன், யோகேஸ்வரன் நிரோயன், வன்னேரிக்குளம் வட்டாரக் கிளைத் தலைவர் தியாகராசா செந்தூரன் மற்றும் கந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் துரை.பாஸ்கரன், கட்சியின் வட்டாரக் கிளை உறுப்பினர் உசா சதீஸ்குமார், மணியங்குளம் கமக்கார அமைப்பின் செயலாளர் மஞ்சுளா ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளடங்கலாக பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




