சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாகக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகித்து, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவன் சமனலவேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளான்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க, சம்பந்தப்பட்டமுறைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அதன்படி, இந்த மாணவனின் தற்கொலைக்குக் காரணம் பகிடிவதை என அறிய, காரணமான நபர்களை அடையாளம் காண தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், “மாணவனின் தற்கொலை பகிடிவதையால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறியவும், அவ்வாறு செய்த நபர்கள் யாராவது இருந்தால் அவர்களை அடையாளம் காணவும் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்” என்று அவர் கூறியிருந்தார்.