உலக தொழிலாளர் தினத்தில் தமது உழைப்புக்கான சிறந்த கௌரவத்தை பெறுபவர்களாக தொழிலாளர்கள் இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வாளரும், தொழிலதிபருமான முஹம்மது றிசான் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் வெளிப்பாடான தொழிலாளர்கள் தினமான இன்றைய நாளில் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அந்த செய்தியில் ஷேக் அமானி தெரிவித்துள்ளதாவது,
காலா காலம் தொழிலாளர் சமூகம் தமது தொழிலுக்கான ஊதியம் மற்றும் அவர்களின் தொழில் நிலையான பாதுகாப்பு போன்ற விடயங்களில் புறந்தள்ளப்பட்டுவருவது ஒரு நாட்டினது முன்னேற்றத்திற்கு பெறும் தடை என்பதை புரிந்து கொள்ள தவறிவிடுகின்றோம்.
உயர் வர்க்கத்தினை மட்டும் மையப்படுத்திய பொருளாதார கட்டமைப்பானது, சமாந்தரமான மனித உழைப்புக்கு பெறும் தடங்களாகவே அமைகின்றது.
தொழிலாளர்கள் என்பவர்கள் எல்லா துறைளையும் சார்ந்தவர்கள், அது அரச மற்றும் தனியார் என்ற பிரிவுகளை கடந்து பார்க்கப்படப் வேண்டும். இவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் இத்துறைகளில் களையப்படல் இன்றைய தினத்தின் கருப்பொருளாக அமைய வேண்டும் என்றும் முஹம்மத் றிசான் ஷேக் அமானி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே வேளை, இன்றைய தொழிலாளர் தினத்தினை சிறப்பாக கொண்டாடும் அனைத்தும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக இந்த செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.