இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினப் பொதுக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக “தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. நாளை காலை 9:00 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆரம்பமாகி யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக மே தினப் பொதுக் கூட்டம் இடம் பெறவுள்ளது.
இதில் இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் சிவில் சமூக மையம், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம், போராளிகளின் நலன்புரிச் சங்கம், அகில இலங்கை கடற்தொழில் மற்றும் கமத்தொழில் சமூகங்களின் கூட்டமைப்பு, வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம், சமூக மாற்றத்திற்க்கான ஊடக மையம், நிமிர்வு ஊடகமையம், மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது