• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின்  தொழிலாளர் தினச் செய்தி..!

Thamil by Thamil
April 30, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின்  தொழிலாளர் தினச் செய்தி..!
Share on FacebookShare on Twitter

உலகெங்கும் வாழும் உழைக்கும் வர்க்கத்தினர் தமது விடியலுக்காக குரல் எழுப்புகின்ற அன்றைய நாளில் அவர்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தினச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தீவைச் சுற்றிக் கடலையும், மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பில் விவசாயத்தையும், பொருந்தோட்டங்களையும் உள்ளடக்கிய எமது நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கத்தினராவர்.

பெருந்தோட்டத்துறை மக்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், அரச தனியார்துறை ஊழியர்கள் அனைவரும் இன்றும் தமது உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற நிலையிலேயே உள்ளனர்.

ADVERTISEMENT

இடதுசாரிக் கொள்கையுடையவர்கள் என தம்மை நம்ப வைத்ததன் மூலம் தொழிலாளர் வர்க்கத்தினதும் உழைக்கும் மக்களினதும் ஏழை மக்களினதும் ஆதரவை பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றவர்கள், தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மறந்து(?) தமக்கு ஆதரவளித்த மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை மூடி மறைத்து வேறு சிந்தனைக்குள் அவர்களை மூழ்க வைக்கும் நடவடிக்கைகளையே பெருமெடுப்பிலான விளம்பரங்களுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்குக் கிழக்குக் கடற்றொழிலாளர்களின் வாழ்வுரிமையும், தொழிலுரிமையும் உறுதிப்படுத்தப்படவில்லை. பண்ணைத் தொழிலாளர்களுக்கு நிலங்கள் வழங்கப்படவில்லை. பொருத்தமற்ற நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற உணவுப் பொருட்களினது இறக்குமதிகளாலும் உறுதியான விலை நிர்ணயமின்மையாலும் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகின்றனர். ஜீ.எஸ்.பி வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் மறுசீரமைப்பினை இழுத்தடிப்பதால் ஆடைக் கைத்தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித்துறை தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டின் மிகப் பெரிய தொழிலாளர் பிரிவான பெருந்தோட்டத் துறையினைச் சார்ந்த மக்கள் தோட்டக் கம்பனிகளின் அடிமைச் சங்கிலிகளில் இருந்து இன்னமும் விடுவிக்கப்படவில்லை, அரச நிர்வாகத்துடன் ஏனைய மக்களுக்கு சரிநிகர் சமானமாக இணைக்கப்படவில்லை. ஆனாலும் மேற்கூறிய விடயங்களின் முன்னேற்றத்திற்காக ஒரு அடி கூட இதுவரை எடுத்து வைக்கப்படவில்லை என்பதே உண்மை.

ஆட்சிக்கு வரும் போது தம்மை அரவணைத்த, பயன்படுத்திய ஆளும் கட்சியினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக அநேகமான தொழிற்சங்கங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றனர். தொழிற்சங்கங்களின் தேவை, பலம், நோக்கம் என்பவை பற்றி அறியாதவர்கள் அல்ல இன்றைய ஆட்சியாளர்கள். உழைக்கும் வர்க்கத்தினரின் அனைத்துப் பிரச்சினைகளினதும் அனைத்துப் பரிமாணங்களையும் ஆழமாக புரிந்தவர்கள் அவர்கள்.

இந்த நாட்டில் இதுவரை தீர்க்கப்படாத அனைத்துப் பிரச்சினைகளினதும் அடிப்படை, ஜயவர்த்தன அரசினால் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்ட முதலாளித்துவப் பொருளாதார முறைமை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. தொடர்ச்சியாக வந்த ஆட்சியாளர்கள் கூட அந்த முறைமையை மாற்ற விரும்புவதாக கூறினாலும் மாற்ற முயலவில்லை.

இவ்வாறான நிலைமையே, மாற்றம் ஒன்றே அவசியமானது எனும் அடிப்படையில், இடதுசாரிகள் என நம்பப்பட்ட தேசிய மக்கள் சக்தியை நோக்கி தேசத்தின் மக்களைத் திரளச் செய்தது. ஆனாலும் அதன் பலனை இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் இதுவரையிலும் உணர்ந்து கொள்ளவில்லை.

எனவே, தமது உரிமைகள் கிடைக்கும் வரை, நலன்கள் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்படும் வரை, தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை உழைக்கும் மக்கள் எந்தவொரு ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராடுவது தவிர்க்க முடியாததொன்றாகி விட்டது.

தங்களது பொருளாதார, மனித வளங்களின் ஆதிக்கத்தை வெளிக்காட்ட இன்றைய தொழிலாளர் தினத்தைப் பயன்படுத்துவதை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வழக்கமாக்கிக் கொண்டுள்ள நிலையில், கட்சிப் பேதங்களின்றி, உழைக்கும் மக்கள் கூட்டத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இயலுமான வரை ஒன்றிணைந்து தனித்துவமாகப் போராட முன்வர வேண்டுமென நாம் அறைகூவல் விடுக்கிறோம். அவ்வாறான போராட்டங்களுக்கு என்றென்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தனது முழுமையான ஆதரவினை வழங்கும்.

ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கமானது தீர்க்கமான சக்திகளில் ஒன்றாக விளங்குமானால் மட்டுமே கௌரவமானதும், நிலையானதுமான தீர்வை எட்ட முடியும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Thamil

      Thamil

      Related Posts

      வவுனியா மாநகர சபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்..!

      வவுனியா மாநகர சபைக்கு நான்கு பெண் உறுப்பினர்கள் நியமனம்..!

      by Thamil
      May 31, 2025
      0

      வவுனியா மாநகரசபையில் மேலதிக ஆசனங்களின் மூலம் நான்கு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 21 உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலம் 5 பெண்கள்...

      கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

      கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 31, 2025
      0

      கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (31) மாலை இடம்பெற்றுள்ளதாக...

      தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம்..!

      தொடரும் ஊடக அச்சுறுத்தல் ; நீதி வழங்குவதில் அநுர அரசும் பாராமுகம்..!

      by Thamil
      May 31, 2025
      0

      "ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக...

      கல்முனையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா..!

      கல்முனையில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழா..!

      by Thamil
      May 31, 2025
      0

      கல்முனை ஹூதா ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 15 வருட காலமாக சேவையாற்றிய இரு முஅத்தின்களின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று (30) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்...

      நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் திரிபு..!

      நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் திரிபு..!

      by Thamil
      May 31, 2025
      0

      ஆசியாவில் தற்போது பரவி வரும் கொவிட் திரிபு இந்த நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணரான...

      எரிபொருள் விலை திருத்தம் குறித்து விடுக்கப்பட்ட அறிவித்தல்..!

      எரிபொருள் விலை திருத்தம் குறித்து விடுக்கப்பட்ட அறிவித்தல்..!

      by Thamil
      May 31, 2025
      0

      மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மே மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

      கொழும்பின் அதிகாரத்தை சஜித் அணியினர் கைப்பற்றவே முடியாது – அடித்துக் கூறும் பிமல்..!

      கொழும்பின் அதிகாரத்தை சஜித் அணியினர் கைப்பற்றவே முடியாது – அடித்துக் கூறும் பிமல்..!

      by Thamil
      May 31, 2025
      0

      "சஜித் அணியினர் எந்த வழியாலும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் ஆட்சி தொடர்பில்...

      வவுனியாவில் நூல்களின் வெளியீட்டு விழா..!

      வவுனியாவில் நூல்களின் வெளியீட்டு விழா..!

      by Thamil
      May 31, 2025
      0

      விஜய் படைப்பகத்தின் இரண்டாவது வெளியீட்டு நிகழ்வாக பெரியதம்பி எழுதிய "மல்லாவியும் என் மறுபிறவியும்", அனுஹரி வன்னி எழுதிய "சூழ்நிலைக் கைதி" நூல்களின் வெளியீட்டு விழா இன்று வவுனியா...

      குரல் தேர்வில் வெற்றி வாகை சூடிய போட்டியாளர்கள்..!   

      குரல் தேர்வில் வெற்றி வாகை சூடிய போட்டியாளர்கள்..!   

      by Thamil
      May 31, 2025
      0

      வவுனியா பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து வவுனியா இசை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல் 2025”என்ற நிகழ்வை நடத்தியிருந்தது. அதற்கான...

      Load More
      Next Post
      லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

      லாகுகல பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

      மன்னார் பொதுப் போக்குவரத்து சாலையின் அவல நிலை..!

      மன்னார் பொதுப் போக்குவரத்து சாலையின் அவல நிலை..!

      யாழ்ப்பாணப் பொது நூலகம் முன்பாக மே தினக் கூட்டம்..!

      யாழ்ப்பாணப் பொது நூலகம் முன்பாக மே தினக் கூட்டம்..!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி