பண்டிகையைக் கொண்டாடுவதற்காக பாணந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, இன்று (29) அதிகாலை அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு பாணந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சதுரங்க என்றும், அவர் துபாயில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் நிலங்காவின் நெருங்கிய உறவினர் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தங்கள் இலக்கான சதுரங்கவை நோக்கிச் சுட முயன்ற போது நடனமாடிக் கொண்டிருந்த ஒரு குழுவில் உள்ள ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கல்லால் தாக்க முயன்றார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அங்கிருந்த மற்றொரு நபரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்காக இருந்த சதுரங்கவுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த இருவரில் ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இறந்ததாகக் கூறப்படும் நபர் கசுன் ஹரிச்சந்திரா என்ற 35 வயதுடைய நபர் ஆவார், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கல்லால் தாக்க முயன்ற நபராவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் 20 வயதுடையவர்.
இந்தத் தாக்குதலை குடு சலிந்து என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் தற்போது தலைமறைவாகி காணாமல் போயுள்ளார். மேலும் குடு சலிந்துவிலிருந்து நிலங்காவிற்குச் சென்ற பாணந்துறை போதைப்பொருள் கடத்தல் தொழிலே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஒரு காலத்தில் குடு சலிந்துவின் கூட்டாளியாக இருந்த நிலங்கா, பின்னர் அவரிடமிருந்து பிரிந்து தனித்தனியாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் நுழைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.