இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியானது குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் 17வது பகுதியில் உள்ள உள்ள ஒரு குடிசைப் பகுதியில் இன்று (27) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மேலும் தீயை அணைக்க பல மணி நேரம் ஆனது என்று கூறப்படுகிறது.
குடிசைப் பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு வளாகங்கள் காரணமாக தீயணைப்பு இயந்திரங்களை அப்பகுதிக்கு நகர்த்துவதற்கு நேரம் எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தில் 800க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன எனத் தெரியவந்துள்ளது.