மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் வாய்க்காலுக்குள் காரொன்று புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை (21-04-2025) மாலை இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து -திருகோணமலை நோக்கி பயணித்த குறித்த காரில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வாய்க்காலினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
