• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 9, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home வாசகர் பக்கம்

சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

Mathavi by Mathavi
April 20, 2025
in வாசகர் பக்கம்
0 0
0
சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்
Share on FacebookShare on Twitter

சிறுபான்மை மக்களின் உரிமைக்குரல்

புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும் நாமமாக ரவூப் ஹக்கீம் என்பதைப் பார்க்கிறோம்.

ADVERTISEMENT

இந்த நாமத்திற்குச் சொந்தக்காரரான ரவூப் ஹக்கீமுடைய ஆளுமை விருத்தியில் பங்களிப்புச் செய்த பல காரணங்கள் இருக்கின்றன.

முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாதவொரு சக்தியாகத் திகழும் ரவூப் ஹக்கீம், தன்னகத்தே பல ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறான ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதில் ரவூப் ஹக்கீமுக்கு உறுதுணையாக அவரின் குடும்ப கல்விப் பாரம்பரியம் இருந்தைக் காண முடியும்.

ரவூப் ஹக்கீம் வசீகரமான தோற்றமுடையவர், புன்னகையோடு பலரோடும் பழகக்கூடியவர், சரளமாக மும்மொழிகளிலும் பேசக்கூடியவர்.

குறிப்பாக, இலங்கை திருநாட்டின் எப்பாகத்திலுள்ள மக்களின் பேச்சு வழக்கில் அந்த பிரதேசத்து மக்களைப் போல் மொழியை கையாளும் தன்மை கொண்டவர்.

குறித்த தன்மை இலங்கையில் மாத்திரமல்லாது, இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர்களின் மொழியை அழகாக கையாண்டு பேசுவது அங்கிருக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதையும், பல பிரபலங்கள் இவர் இலங்கையில் பிறந்தவரா? அல்லது இந்தியாவில் பிறந்தவரா? என வியந்து பேசியதையும் குறிப்பிடலாம்.

இவர் சர்வதேச ரீதியாக நன்கறியப்பட்ட ஒரு தலைவராவார்.

கவி இயற்றும் கவிஞன், கவி பாடும் வல்லவன். இந்த ஆளுமையை யாவரும் வியந்து பாராட்டுவதுமுண்டு. குறுகிய நேரத்திற்குள், வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் பல கவிகளை இயற்றி பாராட்டுக்களைப் பெற்ற சம்பவங்களுமுண்டு. அழகு சுந்தர மொழியான தமிழை அழகாக கையாண்டு அழகு கவி இயற்றி, அந்தந்த பிராந்திய பேச்சு வழக்கு மொழியில் கவி பாடும் அழகு தனிச்சிறப்பாகும்.

அரசியல்வாதியாக அறியப்பட்ட ரவூப் ஹக்கீம் சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதிக வாசிப்புப் பழக்கமுடையவராக ஆரம்பம் காலந்தொட்டு இன்றுவரை காணப்படுகிறார். இதன் காரணமாக தனது பேச்சுக்களில் புதுமையான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்திப் பேசி பலரையும் சொல்லுக்கு அர்த்தம் தேடி அகராதி படிக்க வைத்தவர். எழுத்துத்துறையில் கவிதைகள் மாத்திரமின்றி, முஸ்லிம் சமூகம் தொடர்பில் நூலொன்றையும் வெளியிட்டிருந்தார்.

சட்டத்தரணியாக நீண்டகாலம் பணி செய்வதற்கான வாய்ப்புகள் அரசியலுக்குள் பிரவேசித்ததால் கிடைக்காது போனாலும், அவர் திறமையான சட்டத்தரணி என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி இலங்கை வங்கிக்கொள்ளை வழக்கில் வாதாடி தனது தரப்பிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தததையும் இங்கு நினைவுபடுத்துகிறேன். மேலும் அரசியலில் செயற்பாடுகள், வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சட்டக்கற்கையின் தனக்கிருந்த ஆர்வத்தினால் சட்டமுதுமானி கற்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சட்டமுதுமானியாக வெளிவந்திருக்கிறார்.

அரசியல் பிரவேசம் என்பது தனது ஆளுமைகளைக் கண்டு தன்னை அரசியலுக்குள் அழைத்த முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரஃப்போடு ஆரம்பமாகியது.

1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃப்பின் வேண்டு கோள்களின்படி சிறப்பாகச் செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் ஹக்கீம் அயராது பாடுபட்டார். 1992ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது அவர் தலைமைக்குப் பக்கபலமாகச் செயற்பட்டார்.

ரவூப் ஹக்கீமின் ஆளுமை பண்புகள், கட்சி செயலாளராக சிறப்பாக செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற் கொள்ளப்பட்டதால் 1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34வது வயதில் தேசியப்பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, நாடாளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

1998ம் ஆண்டு அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களுக்காக ஜெய்சீஸ் அமைப்பு வருடாவருடம் வழங்கும் சிறந்த இளைய அரசியல்வாதிக்கான விருதை வென்றுள்ள ரவூப் ஹக்கீம், கொழும்பு மாவட்ட பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றவராவார்.

1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப் தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப்பதவியில் இருந்து அகற்றி, தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக ஹக்கீமை அஷ்ரஃப் பதவி மாற்றம் செய்தார்.

2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, மரச் சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.

2000ம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சி தலைமைத்துவத்திற்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.

2000ம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னணியில் அரச சார்பு அரசியல்வாதிகள் இருந்ததனை ஹக்கீம் வெளிப்படையாகவும் பலமாகவும் கண்டித்ததன் காரணமாக தனது அமைச்சரவையிலிருந்து சந்திரிக்கா அம்மையார் ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவில் இருந்து இரவோடிரவாக அதிரடியாக நீக்கினார். அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் சந்திரிக்கா அரசு பெரும்பான்மையை இழந்து தடுமாறி கவிழ்ந்தது.

2001ம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப்ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை, முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதாவுல்லாஹ், ஹரீஸ், அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, சந்திரிக்கா அணியோடு இணைந்து ஒரு சவால் மிக்க சூழலை கிழக்கு அரசியலில் தோற்றுவித்த போதும், மிகவும் துணிச்சலோடு களத்தில் இறங்கிய ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி, மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததன் காரணமாக பங்காளி கட்சியான முஸ்லிம் காங்கிரஸும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு வழங்கப்பட்டது. அதே வருடம் டிசம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.

2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. கட்சியின் மட்டக்களப்பு முக்கிஸ்தர் திடீர் என கட்சிதாவியதால் உருவான சவால் மிக்க சூழலை தைரியமாக எதிர்கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம், தனது நாடாளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றார். கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் பதவியைவிட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலூடாக மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஷ அரசின் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கி இருந்த்ததனால் அரசுக்குள் இருந்து கொண்டே சமூகத்திற்கான போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்கின்ற சாணக்கியமான நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த ஹக்கீம், 2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அன்றைய எதிரணி பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக அவர் இருந்தார். அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னைய அமைச்சுக்களுடன் சேர்த்து உயர்கல்வியமைச்சும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் தொடர்ச்சியாக 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளி விழா கண்ட ரவூப் ஹக்கீம், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற வாழ்வில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்து “முத்து விழா” கண்ட அரசியல்வாதியாகினார்.

சமூகம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் போது அமைச்சுப் பதவிகளைத் துறந்து வெளியேறி துணிச்சலுடன் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகண்டவர் ரவூப் ஹக்கீம். ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அழிக்க அந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திய போது கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டபோது அவற்றிற்கும் ரவூப் ஹக்கீம் முகம் கொடுக்க நேர்ந்தது.

2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டு முதன்மை வெற்றியாளராக வெற்றி பெற்றார். பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அரசியலை ரவூப்ஹக்கீம் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாதச் சக்திகளின் நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், முஸ்லிம் விவாக, விவாகரத்து, காதி நீதி மன்றத்திற்கெதிரான நிலைப்பாடு, மத்ரஸாவுக்கெதிரான கருத்து எனப் பலவாறான பிரச்சினைகளுக்கு சமூகம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த ஆட்சி நாட்டு மக்களை வீதிக்கு இறக்கும் நிலையைத் தோற்றிவித்திருப்பதை கண்டித்து தனி நபராக தன்னாலான அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் தலைவராக ரவூப் ஹக்கீம் திகழ்ந்தார்.

முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பெண் அடிமைவாதிகள் என பிழையான கருத்தியலை பிரச்சார உத்தியாக இனவாதிகள் கையில் எடுத்திருந்த சூழலில், போது ரவூப் ஹக்கீம் அவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் “WE ARE A PART , NOT APAART ” (நாம் ஒரு பிரிவினரேயன்றி, பிரிந்து வாழ்பவர்கள் அல்லர்) என்ற நூலை எழுதி 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த வருடம் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார்.

இந்நூலில் ” இஸ்லாம் பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவமும் கொண்ட மார்க்கமல்ல” என்ற கருதுகோளை அவர் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூல் காலத்திற்குப் பொருத்தமான நூலாக நோக்கப்படுகிறது.

இவ்வாறு தனது வாழ்நாளில் பல படித்தரங்களைப் பெற்று முன்னேறி இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தோடு செயற்படும் தலைவராக, பெரும்பான்மை இன மக்களின் ஆதரவையும் ஒரு சேரப் பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர் என்ற தகைமை ரவூப் ஹக்கேமிற்கே உரியது. அவர் சிங்கள மக்களோடும், தமிழ் மக்களோடும் சிறந்த உறவைப் பேணி வருகிறார். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இன நல்லுறவைப் பலப்படுத்தும் தலைவராக ரவூப் ஹக்கீம் இருப்பதனால், “அமரபுர நிக்காயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தினால்” அதன் துணை பீடாதிபதி கொடுகொட தம்மவாச நாயக்க தேரரின் தலைமையிலான சங்க சபை “சர்வ சமய சாமகாமீ தேச அபிமானி லங்கா புத்ர” எனும் விருதை கண்டி புஷ்பானந்த கேட்போர் கூடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

2024ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி சார்பான இடதுசாரி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னணியில் 2025ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏனைய கட்சிகளுக்கு பெரும் சவாலாக காணப்பட்டபோது, பெரும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி கண்டுவிடுவோம் என்று ஒதுங்கிய நிலையில், ரவூப் ஹக்கீம் போன்றவர்களை தோற்கடிக்கவேண்டும் என நாலா பக்கத்தாலும் சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருந்த சூழலில் உறுதியான குரலை பாதுகாக்கவேண்டும் என எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக இறைவன் உதவியால் சதிகளை முறியடித்து ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதன்மையாக மீண்டும் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற பலமும் ஆட்சியாளர் கைவசம் இருக்கத்தக்கதாக நாடாளுமன்றத்தில் நாட்டின் நலனுக்காக, சிறுபான்மை மக்களின் உரிமைக்காக,தான் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச் சொல்பவராக, குரல் கொடுப்பவராக ரவூப் ஹக்கீம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளதை காணமுடிகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று அனுபவமில்லாத பலர் இருக்கத்தக்கதாக ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் மூன்று தசாப்த நாடாளுமன்ற அனுபவம் என்பது இன்றியமையாத ஒன்றாக மக்களால் உணர முடிந்திருக்கிறது.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

Thinakaran
398 676.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 1 year ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      நான் ஸ்ரீலங்கன் இல்லை..!

      by Thamil
      May 9, 2025
      0

      தீபச்செல்வன் என்ற புனைப்பெயர் கொண்ட அண்ணன் பிரதீபன் ஈழ தேசத்தில் தவிர்க்கவும் மறுக்கவும் முடியாத எழுத்தாளராவார். ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த அண்ணன் தீபச்செல்வனின் எழுத்துக்கள் தூங்கும்...

      உணர்வுகளின் சங்கமம்..!

      உணர்வுகளின் சங்கமம்..!

      by Thamil
      May 9, 2025
      0

      சிறுவயதிலிருந்து தாயின் அன்பினையும் அரவணைப்பினையும் அள்ளிப் பருகிய ஆண் பிள்ளைகளில் அரியநாயகமும் ஒருவராவார். தமிழின் தொன்மை நூல்களினை ஆங்காங்கே கிடைக்கின்ற நேரத்தில் படித்து கதையாக, பாடலாக தாய்...

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்

      by Mathavi
      April 26, 2025
      0

      விளக்கவுரைஎழுத்தாளர். ஆதன் குணா என்னுடைய முதல் எழுத்துரு பதிப்பானது கவிதையில் இருந்தே தொடங்குகிறது. சிறு சிறு துளிகளாக வடித்து இந்த கவிதை நூலினை சிற்பமாக வடித்துள்ளேன். நீண்ட...

      மூன்றாவது கண்

      மூன்றாவது கண்

      by Mathavi
      April 18, 2025
      0

      கவிஞர் இரா. மேரியனின் படைப்புகளில் ஒன்றான "மூன்றாவது கண் " கவிதை நூலினை வாசிக்க வாசிக்க கவிதைகளில் இன்பம், புத்துணர்ச்சியின் ஈடுபாடு அதிகமாக தென்படுகிறது. மரபணுவில் கவிதைத்...

      குமுதாவின் கதை… பாகம் = 01

      குமுதாவின் கதை… பாகம் = 01

      by Mathavi
      April 10, 2025
      0

      அஹா என்ன ஒரு அதிசயம் எங்கு பார்த்தாலும் பச்சை பசலையாக காட்சியளிக்கும் இயற்கை. வண்ண வண்ண பூக்களில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள், பறவைகளின் கீச்சிடும் சத்தம்...

      என்னைத் தேடுகிறேன்

      என்னைத் தேடுகிறேன்

      by Mathavi
      April 10, 2025
      0

      கிணற்றடித் தென்னையின் கீழ்தென்னோலைத் துண்டொன்றைஎடுத்துப் போட்டுதென்னை நிழலையும்கடந்து வரும்பனித் துளிகளைஉடலில் சுமந்துதூங்கிய இரவுகள் அடுத்த கிணற்றடிகளின்நீர் இயந்திரங்களின் சத்தம்தாலாட்டாகத் தூங்க வைக்கஅடிக்கடி விழித்துமீண்டும் கண்களைஇறுக மூடித்தூங்கும் முயற்சிகள்...

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      சென்னை விமான நிலையத்தின் அவலநிலை- சுற்றுளா பயணிகள் பெரும் அவதி!

      by Bharathy
      April 8, 2025
      0

      சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு மாத்திரம் இலவச (Wifi) வழங்குவதாகவும் வெளிநாட்டவர்களுக்கு இவ் வசதிகள் இல்லையெனவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்களின்...

      ஹீருலீன்களின் தடங்கள் கிழிசல்களைத் தைக்கும் ஊசியாக….

      ஹீருலீன்களின் தடங்கள் கிழிசல்களைத் தைக்கும் ஊசியாக….

      by Mathavi
      April 4, 2025
      0

      அஷ்ரபா நூர்தீனுடைய இரண்டாவது படைப்பாகவே "ஹிருலீன்கள்" என்ற இந்த கவிதை நூல் வெளியீடு கண்டுள்ளது. மகுடம் இலக்கிய வட்டத்தினால் வெளியீடு கண்டதனது நூலின் என்னுரையில் இறைவனுக்கே எல்லா...

      “பொறாமை”

      “பொறாமை”

      by Mathavi
      April 4, 2025
      0

      உடலை ஆக்ரமிக்கும் உள்ளத்து நோய்ஊரை வழி கெடுக்கும் பேய்உற்றார் சுற்றாரை ஒதுக்கும் நாய்ஊனம் வெப்பமாகி மூலையில் காய் கண் பார்க்கும் பார்வையை வெறுக்காய்காது கேட்கும் கேள்வியை மறுக்காய்மூலை...

      Load More
      Next Post
      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      இலங்கை மற்றும் உலகில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள்.!

      வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!

      வல்வெட்டித்துறை நகராட்சியின் தமிழ்த் தேசியப் பேரவை வேட்பாளர்கள் அறிமுகம்.!

      அனுர அரசு நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது.!

      அனுர அரசு நிதியை வைத்து தமிழரை அடிபணியச் செய்ய முயல்கின்றது.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி