அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகைதீன் மாவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த தேக்கு மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.