தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட பொழுது குறித்த வாகனத்திலிருந்து போதை பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக. இன்று 13.03.2025 குறித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட பொழுது ஐந்து 05கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரும் அவர் பயன்படுத்திய கப்ரக வாகனமும் சிறப்பு அதிரடி படையினரால் பறி முதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


