அனுராதபுரம் வைத்தியர் பாலி யல் துஷ் – பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து நாடுபூராகவும் வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல மயில் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் வருகை தந்த நோயாளர்களுக்கு பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.




