புளுமெண்டல் ரயில் கடவை புனரமைப்பு பணிகளுக்காக நாளை (01) முழுமையாக மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த வீதி மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒருகொடவத்தையிலிருந்து துறைமுகம் வரை செல்லும் ரயில் கடவையில் உள்ள புளுமெண்டல் தொடருந்து கடவையில் அவசர புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.