முறிப்பு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் (15) இரவு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவரின் வீடே நேற்றையதினம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
முறிப்பு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்தே நேற்றையதினம் உயிரிழந்தவரின் எதிராளிகளில் ஒருவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

