இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
அவர் நாளை காலை 9 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்மில் ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்.
ஆளுநரின் சந்திப்பைத் தொடர்ந்து யாழ். நகரின் மத்தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இடம்பெறும் ஒரு நிகழ்விலும் அவர் பங்குகொள்ள உள்ளார்.