• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 12, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அநுர அரசே தமிழருக்கு நீதி வேண்டும் – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் சிறீதரன் எம்.பி. வலியுறுத்து.!

Mathavi by Mathavi
February 13, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
அநுர அரசே தமிழருக்கு நீதி வேண்டும் – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் சிறீதரன் எம்.பி. வலியுறுத்து.!
Share on FacebookShare on Twitter

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு நீதியை வழங்க இந்த அரசு முன்வரவேண்டும் எனத் தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

“உயர் பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிட்டு அந்தப் பகுதிக்குள் மக்களைப் போக விடாமல் தடுத்துக் கொண்டு அந்தப் பகுதியில் இரகசியமாக – அதிலும் கொரோனாத் தொற்றுநோய் பரவிய காலத்தில் இராணுவத்தினரைப் பயன்படுத்தி இந்த விகாரையை – அதுவும் தமிழ் மக்களின் காணிகளிலே அமைத்திருப்பது மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகும்.

சட்டம் என்பது இந்த நாட்டில் நீதியானதாக சமமானதாக இருந்தால் அது எல்லோருக்கும் உரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் பல தடவைகள் சொல்லியிருக்கின்றோம்.

குறிப்பாக தம்புள்ளையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த காளி கோயிலைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று கூறி பௌத்த பிக்குமாருடைய வேண்டுகோளுக்கு இணங்க இரவோடிரவாக இடித்தழித்தனர்.

தமிழ் மக்களின் இந்துக் கோயிலை இப்படி இடித்தழிக்கலாம் என்றால் போருக்குப் பிற்பாடு கடந்த பத்து ஆண்டுகளுக்குள் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்ட இந்த விகாரையைச் சட்டத்தின் பிரகாரம் ஏன் இடிக்க முடியாது என்ற கேள்வியைத்தான் நாங்கள் கேட்டிருக்கின்றோம்.

ஏனென்றால் இது தமிழர்களின் காணி. அவர்களின் சொந்த நிலம். அவர்கள் வாழுகின்ற நிலம். இங்கே விகாரைக்கென ஒதுக்கப்பட்ட அல்லது விகாரை இருந்த இடத்தில் விகாரை கட்டியிருந்தால் யாரும் அதைப் பற்றி கேட்கப்போவதில்லை.

இந்த இடம் எங்களுடைய பூர்வீக நிலம். இந்த விகாரையை மையப்படுத்தி இதனைச் சுற்றி இப்போது 14 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை மீண்டும் கபளீகரம் செய்ய முயற்சிப்பது மிகப் பெரிய அராஜகம்.

இந்த அராஜகங்களுக்கு எதிராகத்தான் காணி உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டம் பல பேரின் முயற்சியாலும், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த நேரத்தில் இன்னும் இந்தப் போராட்டங்கள் விரிவடைய வேண்டும்.

அரசு இதனைச் சரியான முறையில் அணுக வேண்டும். இப்போது இருக்கின்ற அரசு நடுநிலையோடு இருக்கின்றது, சிஸ்டம் சேஞ்சை உருவாக்குகின்றது, மாற்றத்தைப் பற்றி சிந்திக்கின்றது என்றால் இந்த மக்களுடைய காணியை உடன் விடுவிக்க வேண்டும்.

கொழும்பில் கூட பல விகாரைகள் இரவோடிரவாக இடிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழர் பகுதிகளில் கோயில்கள் சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டி இங்கே தமிழர்களின் நிலத்தைப் பறித்திருப்பது அபாயகரமானது.

ஆக்கிரமிப்பும், அபகரிப்பும், அழிப்பும் தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துமாறு நாங்கள் மீண்டும் சர்வதேச சமூகத்திடமும் அரசிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுவதெல்லாம் தமிழர் நிலங்களைப் பறித்தெடுக்கச் செய்யப்படுகின்ற முயற்சிகள்தான்.

இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு முயற்சியினுடைய கட்டம் என்பதைத்தான் இந்த மக்களினுடைய திரட்சி காட்டுகின்றது. எனவே, தீர்வை அரசு வழங்காவிடின் அடுத்துவரும் காலங்களில் போராட்டம் தொடரும்.

அரசு இதற்கு நீதியான – நியாயமான தீர்வு வழங்க முன்வர வேண்டும். தவறினால் இன்னுமொரு முறை விளைவை ஏற்படுத்தும் அல்லது இந்த நாட்டிலே நீதியற்ற சிங்கள அரசினுடைய முகத்தை இன்னும் துலாம்பரமாகக் காட்டும்.

உண்மையில் நீதியான அரசாக இந்த அரசு இருக்கும் என்றால் கட்டாயம் இந்தப் பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Mathavi

Mathavi

Related Posts

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குங்கள்..!

by Thamil
May 11, 2025
0

ராஜபக்சக்கள் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார். டுபாயில் எமக்கு சொந்தமானது என கூறப்படும் மரியோட் ஹோட்டலை அரசுடமையாக்குமாறும்,...

முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

முள்ளிவாய்க்கால் தினத்தில் அஞ்சலி செய்து எங்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும்..!

by Thamil
May 11, 2025
0

"முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமானது எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 18 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் வலிந்து...

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
May 11, 2025
0

கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் இன்றைய தினம் வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி - பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது...

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!

by Thamil
May 11, 2025
0

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது...

வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்த கார் ; மூவர் படுகாயம்..!

by Thamil
May 11, 2025
0

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கெரோலினா தோட்ட பகுதியில் இன்று (11) காலை ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி ஜனாதிபதி வெளியிட்ட செய்தி..!

by Thamil
May 11, 2025
0

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார். இந்த முடிவு இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக்...

யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

யாழில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு..!

by Thamil
May 11, 2025
0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக...

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா உறுப்பினர்களுடன் தேர்தலுக்கு பின்னரான கலந்துரையாடல்.!

by Mathavi
May 11, 2025
0

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில்...

யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

யாழில் இடம்பெற்ற “பேறுகால உளநலம்” நூல் வெளியீடு..!

by Thamil
May 11, 2025
0

உலக அன்னையர் தினத்தினை முன்னிட்டு அரும்பு நிலையம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து வெளியிட்ட வைத்தியர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் எழுதிய "பேறுகால உளநலம்" நூல் வெளியீடும்,...

Load More
Next Post
சட்டவிரோத விகாரை அகற்றப்படும் வரை ஓயாது தொடர்ந்தும் போராடுவோம் – கஜேந்திரகுமார் எம்.பி. சூளுரை

சட்டவிரோத விகாரை அகற்றப்படும் வரை ஓயாது தொடர்ந்தும் போராடுவோம் - கஜேந்திரகுமார் எம்.பி. சூளுரை

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்.!

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்.!

எங்கள் கடல் வளத்தை அழித்தொழித்து விட்டு தொப்புள் கொடி உறவு எனக் கூறுவது நியாயமா?- அமைச்சர் சந்திரசேகர் கேள்வி.!

எங்கள் கடல் வளத்தை அழித்தொழித்து விட்டு தொப்புள் கொடி உறவு எனக் கூறுவது நியாயமா?- அமைச்சர் சந்திரசேகர் கேள்வி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி