• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 11, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

எங்களால் இயலாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும்!

Bharathy by Bharathy
January 30, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
எங்களால் இயலாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும்!
Share on FacebookShare on Twitter

எங்களால் செய்ய முடிந்தால் பதவியில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் செய்யக்கூடிய ஒருவரிடம் பதவியை ஒப்படைத்துவிட்டு வெளியேறிவிடவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று வியாழக்கிழமை காலை (30.01.2025) திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக தாயும் சிசுவும் ஒன்றாக இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் வை.திவாகர், தனது தலைமை உரையில், இருக்கின்ற மனிதவளம் உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிட்டார்.

அத்துடன் சுகாதாரத்துறை மீது சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை அடிமட்டத்திலிருந்து எவ்வாறு இங்கு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதையும் அதனை அனைவரும் மறந்துவிட்டனர் என்றும் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் முதன்மை பிரச்சினையாக ஊழல் கூறப்பட்டாலும், வினைத்திறனற்ற பணியாற்றுகையே முதன்மையானது என்று குறிப்பிட்ட மருத்துவ அத்தியட்சகர் ‘சும்மா இருப்பதையே’ அதிகளவானர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர்கள் தொடர்பில் யாரும் அலட்டிக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தனது சிறப்பு விருந்தினர் உரையில், 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் பதவிக்கு வந்ததாகவும் அப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மூவரே மருத்துவ அதிகாரிகளாகப் பணியாற்றியதாகவும் இன்று 350 பேர் பணியாற்றுக்கின்ற நிலைமைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை சாம்பலிருந்தே மீண்டெழுந்திருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா மருத்துவமனையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆளணி மீளாய்வு அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். மேலும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் திறந்து வைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒட்டுமொத்த வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கும் எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக கடந்த டிசெம்பர் மாதம் பரவிய எலிக்காய்ச்சலை இங்குள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறையினர் இணைந்து கட்டுப்படுத்தினர் என்றும் இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு மிகச் சிறந்த பாராட்டைத் தெரிவித்துள்ளது எனவும் குறிப்பிட்ட அவர், இது உங்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.

ஓரிடத்தின் தலைமைத்துவத்தில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது என்பது உண்மை. உங்கள் மருத்துவ அத்தியட்சகர் திவாகர், தெல்லிப்பழை மருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகராக இருந்தபோது அதை வளப்படுத்தி திறம்ப இயக்கினார். தற்போது இந்த மருத்துவமனையை திறம்பட இயக்குகின்றார்.

அவர் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் ஓயமாட்டார். அத்தியட்சகர் தனது தலைமை உரையில் குறிப்பிட்டதைப்போன்று அலுவலகங்களில் ‘சும்மா இருப்பவர்கள்’தான் இன்று அதிகமாகிக்கொண்டு செல்கின்றனர். என்னைச் சந்திக்கும் பொதுமக்களும் அதனைத்தான் சொல்கின்றனர். ஓர் அலுவலகத்துக்குச் சென்றால் இருவர் வேலை செய்வார்கள். ஏனையோர் பேசாமல் இருப்பார்கள் என்று முறையிடுகின்றார்கள். இதுபோதாது என்று எதிர்மறையாகச் சிந்திக்கும் அலுவலர்களும் அதிகமாகின்றது. ‘முடியாது’ என்ற வார்த்தைதான் அவர்களிடமிருந்து வருகின்றனது. தாம் எதையும் எம்மால் செய்ய முடியும் என நினைக்கவேண்டும். அல்லது அதை எப்படிச் செய்யலாம் என்பதைச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

என்னை அரசியலுக்கு அழைத்துவருவதற்கு சிலர் கடந்த காலங்களில் முயற்சித்தார்கள். நான் அதை அடியோடு மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதுமில்லை. எனக்கு அந்த எண்ணமும் இல்லை.
ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாம் மாற்றுத் திட்டங்களை தயாரிக்கவேண்டும். இந்த மருத்துவமனையின் ஏனைய தேவைகளில் எங்களால் செய்து தரக் கூடியவற்றை விரைந்து செய்து தருவோம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, பருத்தித்துறை பிரதேச செயலர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Bharathy

Bharathy

Related Posts

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்..!

by Thamil
May 10, 2025
0

2025 வருட வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் தேசிய வெசாக் வாரம் இன்று (10.05.2025) ஆரம்பமாகிறது.அதன்படி எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரியவந்துள்ளது.

வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

வெலிமடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேரூந்து..!

by Thamil
May 10, 2025
0

வெலிமடை பிரதேசத்தில் சற்று முன்னர் நடைபெற்ற பேரூந்து விபத்தொன்றில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர். பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று டயரப...

கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

கடலில் நடக்கும் திருட்டை தடுக்கக் கோரி இடம்பெற்ற ஒன்றுகூடல்..!

by Thamil
May 10, 2025
0

"ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து அம்பாறை மாவட்ட மீனவர்கள் சாய்ந்தமருது மருதூர்...

அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

அடாவடித்தனமான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்..!

by Thamil
May 10, 2025
0

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில் தமிழ் மக்கள் ஈடுபட்ட போது கல்கமுவ...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்து..!

by Thamil
May 10, 2025
0

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (10) மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பிரதான...

உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் அறிவுறுத்து..!

by Thamil
May 10, 2025
0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கான சந்திப்பு,...

கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

கொழும்பில் தீ விபத்து ; சேதமடைந்த கட்டிடங்கள்..!

by Thamil
May 10, 2025
0

கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றைய தினம் (10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன் போது, 6 தீயணைப்பு வாகனங்கள்,...

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

வாக்கு வேட்டைக்காக வடக்கை நாங்கள் அரவணைக்கவில்லை.!

by Mathavi
May 10, 2025
0

"தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்குச் சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை." - இவ்வாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு...

கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

கொழும்பில் உள்ள விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்..!

by Thamil
May 10, 2025
0

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள மிரானியா வீதிக்கு அருகில் உள்ள கடைகளின் வரிசையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்ப கொழும்பு...

Load More
Next Post
யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார்!

யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார்!

சற்றுமுன் மாவை சேனாதிராஜா காலமானார்!

மறைந்த தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களின் இறுதி கிரியை!

15 நாட்கள் புத்தாண்டை கொண்டாடும் சீன மக்கள்

15 நாட்கள் புத்தாண்டை கொண்டாடும் சீன மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி