• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா எனும் மாபெரும் சரித்திரம் சரிந்தது.! (வாழ்க்கை வரலாறு)

Mathavi by Mathavi
January 30, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா எனும் மாபெரும் சரித்திரம் சரிந்தது.! (வாழ்க்கை வரலாறு)
Share on FacebookShare on Twitter

தமிழினத்தின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் இறுதி வரை அயராது போராடிய தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார்.

அன்னாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாவையின் வரலாறு

ADVERTISEMENT

அமரர் மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. அவரின் சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டார்.

அவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் தியாகி பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், நடேஸ்வராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயற்பட்டு 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.

1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

1977 இல் மாவை சேனாதிராஜா மணமகளாக தமது உறவு முறை பவானி என்பவரைத் திருமணம் முடித்தார்.

1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டபோதும் அதில் தெரிவாகவில்லை.

அதன் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 இல் கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து அவரின் இடத்துக்கு மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அந்தத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூடுதலாக அம்பாறைக்கே அவர் பயன்படுத்தினார்.

பலருக்கு அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகள், துறைமுக அதிகாரசபை நியமனங்களை பெற்றுக்கொடுத்தமையுடன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அம்பாறை மாவட்டத் தமிழ் கிராமங்களுக்கே அவர் ஒதுக்கியும் இருந்தார். பெரியநீலாவணை வைத்தியசாலை இவருடைய பன்முகப்படுத்தக்பட்ட நிதி மூலம் கட்டடம் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

1994 தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி மூலமாகத் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவர் தெரிவாகவில்லை.

1999 ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

2001 ஒக்டோபர் 20 இல் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுவிய பின்னர் 2001 தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் விடுதலை கூட்டணி 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றக் குழு கூட்ட எடுத்தபோது – ஆனந்தசங்கரி அதை ஏற்கமுடியாது என முட்டுக்கட்டை போட்டபோது – மாவை விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதன்பின்னர் 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

2020 தேர்தலில் போட்டியிட்டும் 29 ஆயிரத்து 358 வாக்குகளைப் பெற்றும் அவர் தெரிவாகவில்லை.

தமிழரசுக்கட்சி பொதுச் செயலாளராக 2004 தொடக்கம் 2014 வரையும் பதவி வகித்தார். பின்னர் வவுனியாவில் 2014 இல் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

2024 பொதுத் தேர்தலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுகின்றேன் என அறிவித்தார்.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் 2024 டிசம்பர் 28 இல் வவுனியாவில் இடம்பெற்றபோது அந்தக் கூட்டத்தில் கட்சியின் பதில் தலைவர் பதவி சி.வி.கே.சிவஞானத்துக்கு வழங்கப்பட்டது. மாவை சேனாதிராஜாவிற்கு அரசியல் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் கடந்த 2014 செப்டம்பர் 07 தொடக்கம் 2024, டிசம்பர் 28 வரையும் ஏறக்குறைய 10 வருடங்கள் தலைவராகவும், அதற்கு முன்னர் 2004 தொடக்கம் 2014 வரை 10 வருடங்கள் பொதுச்செயலாளராகவும் அவர் பதவியில் இருந்துள்ளார்.

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      by Thamil
      May 12, 2025
      0

      தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக...

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      by Thamil
      May 12, 2025
      0

      கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது....

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட...

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை...

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு...

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      by Thamil
      May 12, 2025
      0

      மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் மக்களை புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்...

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      by Thamil
      May 12, 2025
      0

      "அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

      Load More
      Next Post
      65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபக்கரிக்க முயற்சி; நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த எம்.பி.!

      65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபக்கரிக்க முயற்சி; நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த எம்.பி.!

      தமிழரசின் மூத்த தலைவருக்கு அஞ்சலி மரியாதை..!

      தமிழரசின் மூத்த தலைவருக்கு அஞ்சலி மரியாதை..!

      கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

      கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி