இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிறிது காலம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.
1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.
ADVERTISEMENT
இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.