வவுனியா, இலுப்பையடிச் சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வவுனியா பாெலிஸார் தெரிவித்தனர்.
இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.