வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்று 17.12.2024 அதிகாலை மீன்பிடி படகு ஒன்று விபத்துக்குள்ளானது.
வானிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் 19ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் எச்சரிக்கையை மீறி மீன்பிடிக்க சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
ADVERTISEMENT
படகில் பயணித்த இருவரும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதுடன் ஒரு தொகுதி மீன்பிடி வலைகள் கடலுடன் அடித்துச் செல்லப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு விபத்துக்குள்ளான படகையும் கரைக்கு கொண்டுவந்தனர்.
