குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை (05) இரவு பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல, தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார்.
கொலை செய்யப்பட்டவர் மற்றொரு இளைஞனுடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான இளைஞன் குறித்த இளைஞனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான 30 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.