மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
வனவள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் இன்று (10.04) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகள் தொடர்பாக எமது அரசாங்கம் கவனம் செலுத்தி அவர்களுக்கு சாதகமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல் கால்நடை வளர்பாளர்களுக்கும் மேய்ச்சல் தரை தேவை காணப்படுகின்றது. அதற்காக கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வனப் பிரதேசத்தில் மேய்சலில் ஈடுபடுத்துவதற்கும் நாம் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளோம். இதற்கு சாதகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
எனவே, கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் எதிர்காலத்தில் எமது அரசாங்கம் சிறந்த தீர்வைத் தரும். வன்னி வாழ் மக்களே நீங்கள் தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.