கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று உந்துருளிகளில் ஐந்து பேர் அதிவேகமாக பயணித்த போது வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதியுள்ளனர். இதில், ஒரு எருமை உயிரிழந்துள்ளதுடன், நான்கு எருமைகள் காயங்களுக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளிகளில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், ஐந்து இளைஞர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.