யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில்,
விபத்தின் போது இருவர் கீழே விழுந்திருந்தனர். மோட்டார் வாகனத்தை காணவில்லை அதன் உரிமையாளர் எடுத்து சென்றிருந்தார். 1990 சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நேயாளர் காவு வண்டி வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்த போது அவர்கள் என்ன? எதற்கு? என கேள்விகளை வினாவினர். தொடர்ந்து உறவினர்களுக்கு அறிவித்து பின்னர் உயிரிழந்தவரின் நண்பர்களும் வந்த பின்னர் குறித்த மாணவன் பட்டாரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
இந் நிலையில் பட்டாரக வாகனத்தில் தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்ட பொழுது அங்கு 17 வயதானவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபரை யாழ் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர்.
இதேவேளை உயிரிழந்த மாணவனின் தாயார் சம்பவ இடத்தில் மயங்கி வீளந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வருகை தந்த நோயாளர் காவு வண்டியானது, அவரை ஏற்ற நாம் வரவில்லை அவரை வேறு வாகனத்தில் அனுப்புங்கள் என கூறிச் சென்றனர்.
குறித்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் பின்னர் மீட்டிருத்தனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.