அநுராதபுரம், ஹபரணை பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய நபராவார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹபரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.