2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
இதனடிப்படையில், மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.