• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !

User1 by User1
August 30, 2024
in இலங்கை செய்திகள், நாட்டு நடப்புக்கள்
0 0
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் !
Share on FacebookShare on Twitter

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது. வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. நீதிமன்றத்தின் தீரப்புக்கமைய சகல தரப்பினரும் செயற்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியது. இந்த கலந்துரையாடல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு உரிய இலக்கம் SCFR 69 2023 , SCFR 90 / 2023 மற்றும் SCFR 139 \ 2023 இலக்க அடிப்படை உரிமை மனுத் தொடர்பில் 2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்ற ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் வழங்கிய தீர்ப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு கௌரவமான முறையில் ஏற்றுக்கொண்டுள்ளது.

வாக்காளர்களின் சட்ட ரீதியிலான அபிலாசைகள், வாக்களிக்கும் உரிமை , அரச நிறுவனங்களின் செயற்பாடுகளினால் ஏற்படக் கூடிய நியாயமான கோட்பாடுகள் மற்றும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி வழங்கள், தொடர்பில் அரச நிறுவனங்களிடம் உள்ள இயைவான அதிகாரங்களை செயற்படுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் வழங்கப்பட்டுள்ள மீயுயர்வான நீதிமன்றத்தின் தீர்ப்பாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானிக்கப்பட்டதற்கமைய நடத்தாமை மக்களின் அடிப்படை தொடர்ச்சியான மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. ‘ சட்ட நியதிகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தன்னிச்சையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தப்பட்டு , 2023 உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் விரிவான காரணிகளை குறிப்பிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடல், ஒருங்கிணைத்தல், வளங்களை வேறுப்படுத்தல், அதற்காக ஏனைய தரப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல், மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நிறைவேற்றுத்துறை உட்பட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தத்துவங்கள், பொறுப்பு மற்றும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் வெவ்வேறாக தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உரிய சட்டம் உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டம் என்றும், சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள காலவரையறைக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் விசேடமாக அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனது என்று குறிப்பிடப்படுவது குறித்து ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ‘ செலவினங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுப்பது வாக்கெடுப்புக்கான பணிகளை முன்னெடுத்ததன் பின்னராகும். அந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதுடன் தொடர்புடையதல்ல,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேவையான நிதியை பெற நிதியமைச்சரின் அனுமதியை கோரி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்காத காரணத்தால் தேர்தல் பணிகளை இடைநிறுத்த நேரிட்டது.இதனால் சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட காலவரைக்குள் தேர்தலை நடத்த முடியாமல் போனது.

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு சார்பாக அழுத்தமான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு சகல அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு செயற்படுவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை மற்றும் பொறுப்பு என உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024.08.22 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விதித்துரைக்கப்பட்டுள்ள வகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள தத்துவங்கள், மற்றும் பொறுப்புக்களை நடைமுறைப்படுத்தலுக்காக அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவதாக இலங்கை பிரஜைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளிக்கிறது.

இலங்கை பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது பொறுப்புக்களை சிறந்த முறையில் செயற்படுத்த இந்த தீர்ப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பலத்தை ஆணைக்குழு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. அதேபோல் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அமைய சட்டத்தால் விதித்துரைக்கப்பட்டுள்ளதற்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் திகதியை அறிவிக்க தீர்மானித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பினை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு தனது நோக்கத்தை செயற்படுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பு மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் ஊடாக ஆணைக்குழுவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள தத்துவங்கள் மற்றும் பொறுப்புக்கள் செயற்படுத்தப்படும். சகல தரப்பினரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய செயற்பட வேண்டும்.

Thinakaran
410 722.4K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

      ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை 329 வது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம...

      பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

      பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை...

      தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

      தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் தெரிவாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் கட்சி...

      காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

      காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

      by Mathavi
      May 30, 2025
      0

      தனது தாயரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று காணாமல் போனவரான...

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்றையதினம் (29) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது....

      தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

      தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் 30.05.2025 இன்று தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி...

      வெளியாகியது சுமந்திரன் – கஜேந்திரகுமார் சந்திப்பின் பின்னணி.!

      வெளியாகியது சுமந்திரன் – கஜேந்திரகுமார் சந்திப்பின் பின்னணி.!

      by Mathavi
      May 30, 2025
      0

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடன் இன்று மாலை நடக்கவிருக்கும் சந்திப்பில் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மட்டுமே பேசப்படும் என்று இலங்கைத் தமிழரசுக்...

      “மன்னரின் விருந்தினராக” 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்.!

      “மன்னரின் விருந்தினராக” 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில்...

      தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பம்.!

      தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      ஜனாதிபதியினால் 29ஆம் திகதி தொடக்கம் ஜுன் 05ஆம் திகதி வரையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு...

      Load More
      Next Post
      இலங்கையைச் சுற்றி 1500 கிலோமீற்றர் தூரம் நடந்த ஷாமி ஷஹீத் ஜனாதிபதியால் கெளரவிப்பு !

      இலங்கையைச் சுற்றி 1500 கிலோமீற்றர் தூரம் நடந்த ஷாமி ஷஹீத் ஜனாதிபதியால் கெளரவிப்பு !

      100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை :  ரணிலின் ஐந்தாண்டுத் திட்டம் !

      100,000 தொழில் வாய்ப்பு, வருமான மூலங்களை வழங்க நடவடிக்கை : ரணிலின் ஐந்தாண்டுத் திட்டம் !

      பாரிஸ் 2024 பராலிம்பிக் நீச்சல் : இலங்கை மாற்றுத்திறனாளி ரஹீமுக்கு கடைசி இடம்

      பாரிஸ் 2024 பராலிம்பிக் நீச்சல் : இலங்கை மாற்றுத்திறனாளி ரஹீமுக்கு கடைசி இடம்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி