• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 24, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

மெத்யூஸ், சந்திமால் அபார ஆட்டம்- இலங்கை அணி பலமான நிலையில்!

Thinakaran by Thinakaran
February 3, 2024
in Uncategorized
0 0
0
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

போட்டியின் 2ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 410 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்க, ஆப்கானிஸ்தானைவிட 212 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

ADVERTISEMENT

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்த நிஷான் மதுஷ்கவும் திமுத் கருணாரட்னவும் தமது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டத்தை 93 ஓட்டங்களாக உயர்த்தியபோது மதுஷ்க 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த குசல் மெண்டிஸ் குறைவான நேரம் துடுப்பெடுத்தாடி 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன  77 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது விக்கெட்டை தாரைவார்த்தார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மற்றைய இரண்டு முன்னாள் தலைவர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்களைப் பெற்றதுடன் 4ஆவது விக்கெட்டில் பெறுமதிவாய்ந்த 232 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

181 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸுடன் 107 ஓட்டங்களைப் பெற்றார். தனது 77ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்திமால் குவித்த 15ஆவது சதம் இதுவாகும்.

அடுத்து களம் புகுந்த புதிய அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தான் எதிர்கொண்ட முதலாவது பந்தில் அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முயற்சித்து வீணாக விக்கெட்டை இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 410 ஓட்டங்களாக இருந்தபோது பந்தை சுழற்றி அடித்து பவுண்டரி ஆக்கிய மெத்யூஸ், தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் விக்கெட்டில் மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

259 பந்துகளை எதிர்கொண்ட மெத்யூஸ் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைக் குவித்து தனது டெஸ்ட் சதங்களின் எண்ணிக்கையை 16ஆக உயர்த்திக்கொண்டார்.

அவர் ஆட்டம் இழந்ததும் 2ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆட்ட நேர முடிவில் சதீர சமரவிக்ரம 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நவீத் ஸத்ரான் 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் காயிஸ் அஹ்மத் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்க்ளையும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

Tags: அணிஅபாரஆட்டம்-இலங்கைஏனையவைசந்திமால்நிலையில்பலமானமெத்யூஸ்,
Thinakaran

Thinakaran

Related Posts

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த சசிகுமாரின் படம்

by Sangeetha
May 5, 2025
0

சசிகுமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படம் 1-ந்தேதி அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு...

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

இராமநாதபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்..!

by Thamil
April 29, 2025
0

தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் 29.04.2025 இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்து...

யாழில் இளம் குடும்பப் பெண்  உயிர்மாய்ப்பு..!

யாழில் இளம் குடும்பப் பெண் உயிர்மாய்ப்பு..!

by Thamil
April 28, 2025
0

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து தனக்குத் தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவுப் பகுதியைச்...

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

யாழில் குடும்பப் பெண் உயிரிழப்பு..!

by Thamil
April 27, 2025
0

யாழில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த கமலநாதன்...

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

யாழில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக் கொண்ட இரட்டையர்கள்..!

by Thamil
April 26, 2025
0

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களைப்...

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

by Sangeetha
April 21, 2025
0

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை...

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்

by Sangeetha
April 19, 2025
0

அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் – தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதிப் போராட்டம்! தியாகதீபம் அன்னை பூபதி...

ஐபிஎல் 2025: டிம் டேவிட் வரலாற்று சாதனை – தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது!

ஐபிஎல் 2025: டிம் டேவிட் வரலாற்று சாதனை – தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது!

by Sangeetha
April 19, 2025
0

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து...

நிலங்கடந்தவளின் நிலத்தின் மீதான ஏக்கம் – விமர்சகரின் ஒரு பார்வை

நிலங்கடந்தவளின் நிலத்தின் மீதான ஏக்கம் – விமர்சகரின் ஒரு பார்வை

by Mathavi
March 24, 2025
0

“நிலங்கடந்தவள்” நூலினை வாசிக்க கையில் எடுத்த போது எல்லாக் கவிகள் போலவே இருக்கும் என்று எண்ணியே தாள்களை புரட்டினேன். தாள்களில் ஊண்டப்பட்ட கறுப்பு சாயங்கள் என்னை மென்மையாக...

Load More
Next Post

அத்வானிக்கு பாரதரத்னா விருது- இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே

சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி