160வது பொலிஸ் வீரர்கள் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 160வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது

சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News 160வது பொலிஸ் வீரர்கள் தினம் - Veeramurasu Breaking News

Comments are closed.