இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 02 சந்தேகநபர்கள் (ஆண் மற்றும் பெண்) 1200 Pregabalin மாத்திரைகளை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் சிலாவத்துறை நானாட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் 07.02.2024 சிலாவத்துறை நானாட்டான் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பை கடற்படையினர் மேற்கொண்டனர்
இந்த சுற்றிவளைப்பின் போது நானாட்டான் பகுதியில் சந்தேகத்தின் பேரில் 02 நபர்களை சோதனையிட்டதுடன் சந்தேகநபர்கள் வசம் இருந்த 1200 Pregabalin மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
![IMG 20240208 133913 IMG 20240208 133913](https://veeramurasu.com/wp-content/uploads/2024/02/IMG_20240208_133913.jpg)
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய நானாட்டானைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், Pregabalin மாத்திரைகளுடன், சிலாவத்துறை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்
Comments are closed.