வாழைச்சேனை அழகியிடம் இருந்த யாரிடமும் இல்லா புதியவகை ஆபத்தான பொருள்..!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று திங்கட்கிழமை (04) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் நீல நிறம் கொண்ட புதிய ஐஸ் போதைப்பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய நேற்று இரவு முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பிறந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 340 மில்லிக்கிராம் புதிய வகையான நீல நிறம் கொண்ட ஐஸ் மற்றும் வெள்ளை நிறமுடைய 4 கிராம் 130 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள் மற்றும் 8 ஆயிரத்து 750 ரூபா பணத்தை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய பெண்ணை விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரது கணவர் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Comments are closed.