யுவதியிடம் நிர்வாணமாக நின்று ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

யுவதியிடம் தன்னை நிர்வாணமாக காண்பித்து கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞராவார்.

இவர் யுவதி ஒருவருக்கு தன்னை நிர்வாணமாக காண்பித்து யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.