மலையகத்தில் 20 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..!{படங்கள்}

இன்று 19 இலங்கை தேசிய நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய இந்திய 10000 வீட்டு திட்டத்தின் கீழ் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட மஹாவ்வா 2ம் பிரிவில் 40 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் முன்னாள் நுவரெலியாய பிரதேச சபை தவிசாளாருமான வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தோட்ட அதிகாரி மற்றும் வலப்பனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட தலைவர்,தலைவிமார்கள், தோட்ட தலைவர் மற்றும் தலைவிமார்கள், பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
IMG 20240219 WA0030 IMG 20240219 WA0027 IMG 20240219 WA0031

Comments are closed.