மன அழுத்தத்தை போராடி வெல்லுமாம் இந்த 6 பழங்கள்..!

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் சில பழங்களை தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம்.

கொய்யா – வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால், குளிர் காலத்தில் இதனை உட்கொள்வதன் மூலம், பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும் கூடுதலாக பெறலாம்

திராட்சை – திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை போக்க சிறந்த வழி.

வாழைப்பழம் – பல வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனுடன், அத்தகைய சூழ்நிலையில் வாழைப்பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரையும் அருந்துவது நல்லது.

புளுபெரி – புளுபெரி எனப்படும் அவுரிநெல்லியில் வைட்டமின் சி, ஏ, பி, ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தைப் போக்கி, உடலை வலுவாக வைத்திருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், இது நியாபக சக்தியையும் அதிகரிக்கிறது

கிவி – கிவி மன அழுத்தத்தைப் போக்க வந்த வரம் எனக் கூறினால் மிகையில்லை.இதில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழம் மன அழுத்தத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆரஞ்சு – ஆரஞ்சு மன அழுத்தத்தை நீக்குகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழம் மன அழுத்தத்தை நீக்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Comments are closed.