மத்திய நாட்டு மலைப்பகுதியில் இன்றும் தீயினால் வனப்பகுதி எரிந்து நாசம்..!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு உள்ள கடுமையான வெப்பம் காரணமாக பல இடங்களில் வன பகுதிகளில் தீ வைப்பதால் பல ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது.

இன்று மதியம் பொகவந்தலாவ கிவ் தோட்ட கீழ் பிரிவு பகுதியில் உள்ள வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 2 ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது.

இதே போல் நேற்று மாலை நோர்வூட் மேற் பிரிவில் உள்ள வனப் பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் சுமார் 5 ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது.

கடந்த முதலாம் திகதி நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் டேர்ப்பன்டைன் வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் தொடர்ந்து 30 ஹெக்டையர் வன பகுதி தீயினால் நாசமடைந்து உள்ளது அத்துடன் தொடர்ந்து அந்த பகுதியில் தீ பரவிய வண்ணம் உள்ளது.

இந்த தீயினை கட்டுபடுத்த தோட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவும் வேலையில் கடும் காற்று வீசுவதால் இத் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Comments are closed.