மது போதையில் இரத்த வாந்தி எடுத்தவர் சடலமாக மீட்பு

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள்ளேயே ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இறந்தவர் வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபரம் செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 43வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவர் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்தவர் என்றும் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

மேலும் நேற்றைய தினம் மாலை வேளை அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன்போது அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வருகை தந்திருந்தும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

மேலதிக விசாரனைகளை வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments are closed.