மட்டு கொக்கட்டிச்சோலையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கு ராணுவத்தினரின் நற்பணி!

கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும,; வீட்டுத்தோட்ட விவசாய பயனாளிகளுக்கு விவசாய உள்ளீடுகளும், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (13) கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன ஆலோசனையின் கீழ் இராணுவத்தினரால் முன்னெடுத்துவரும் சமூக பணியின் ஒரு அங்கமாக சில்வர் மில் அறக்கட்டளை நிதி அனுசரணையில் குருக்கள் மடம் 11 வது இலங்கை சிங்க ரெஜிமென்ற் இராணுவ படை கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்மசிறி ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இதில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணவர்தன, அதிதிகளாக அம்பாறை 24 வது இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிபுள் சந்திரநிறி மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ கட்டளை அதிகாரி கேணல் சந்திம குமாரசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள்

சில்வர் மில் அறக்கட்டளை பிரதி நிதிகள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள், ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள், கலந்து கொண்டு பாடாக தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டின் வாழ்கின்ற கர்ப்பிணி தாய் மார்களுக்கான போசாக்கு உலர்வுணவு பொதிகளும், தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்ட விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்ற வீட்டுத் தோட்ட விவசாய குடும்பங்களுக்கு தென்னை கன்றுகள் மற்றும் வீட்டுத்தோட்ட. விவசாய உள்ளீடுகள் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

WhatsApp Image 2024 03 13 at 01.12.12 (2)

WhatsApp Image 2024 03 13 at 01.12.12

WhatsApp Image 2024 03 13 at 01.12.13

WhatsApp Image 2024 03 13 at 01.12.15

WhatsApp Image 2024 03 13 at 01.12.20

Comments are closed.