இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார்.
இந்த வைத்தியசாலையை நடத்திச் சென்ற வைத்தியர் ஒருவர் கடந்த ஆண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர் ,வைத்தியர் என்ற போர்வையில் இந்த வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.