பெண்களோடு சேட்டைவிட்ட 18 பேர் சிக்கினர்

பொதுப் போக்குவரத்துகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்றைய (07) தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், பொது போக்குவரத்துக்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக பொலிஸாரினால் இன்று (08) முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளிலும் சிவில் உடையில் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.