இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால், உலகின் நச்சு மிகுந்த ராஜநாக பாம்பு கூட கீரிகளை கண்டால் அஞ்சுகின்றன.
இருவருக்குள்ளும் ஏன் இந்த பகை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஃபாரஸ்ட் வைல்ட் லைஃப் என்ற இணையதள அறிக்கையின்படி, கீரி மற்றும் பாம்பு இரண்டையும் எதிரியாகவே இயற்கை உருவாக்கியுள்ளது.
இது இரு உயிரினங்களின் இயற்கையான உள்ளுணர்வு. பல வகையான பாம்புகள் கீரி குட்டிகளை தங்கள் இரையாக்கிவிடுகின்றது.
அந்த நேரத்தில் கீரிகள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க பாம்புகளைத் தாக்கும். இப்படி தான் கீரி மற்றும் பாம்புக்கான போர் ஆரம்பிக்கின்றது. கீரியின் உணவில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உணவுச் சங்கிலியின் ஒரு பகுதியாகும்.
கீரிக்கு அஞ்சும் பாம்புகள்
நகரங்கள் அல்லது கிராமங்களில் எளிதாகக் காணக்கூடிய கீரிப்பிள்ளைகள், மிகப்பெரிய பாம்புகளை வெல்லும்.
உலகின் மிக நச்சு மிகுந்த பாம்பு, ராஜநாகம் கூட இந்த கீரிகளுக்கு பலியாகின்றன.
பாம்புகளை விட கீரிகள் மிகவும் வேகமானவை, அவை பாம்பின் உடலின் தலை மற்றும் பின்புறத்தில் ஒரு அபாயகரமான தாக்குதலைக் கொடுக்கின்றன. இது மரணத்திற்கு வழிவகுக்கிறது.
ஆனால் பல சமயங்களில் பாம்பு தாக்குதலால் கீரியும் இறந்துவிடும். அவைகள் ஒரு பாம்பை கொன்று சாப்பிடும் போது, பாம்பின் பற்கள் அவற்றின் வயிற்றில் அல்லது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் துளைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக உள் இரத்தப்போக்கு தொடங்கி அது மரணத்திற்கு வழிவகுக்கிறது. கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில் கீரி 75 முதல் 80 முறை வெற்றி பெறும் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Comments are closed.