நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!

நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட வீதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூரையாட பட்டு உள்ளது.

இச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தது உள்ளதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டு உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

இச் சம்பவம் குறித்து நகரில் உள்ள சீசீ டிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்ச்சிகளை பார்வை இட்ட பின்னர் சந்தேக நபர் கருப்பு நிற உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது எனவும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் பற்றிய விவரங்கள் திரட்டுவதற்காக பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.