தீவா (Diva) கரத்திற்கு வலிமை” தொழில் முயற்சியாண்மை திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு..!{படங்கள்}

தீவா (Diva) கரத்திற்கு வலிமை” தொழில் முயற்சியாண்மை திறன் விருத்தி நிகழ்வின் வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக,  மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்திப் பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Women in Management அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெண் தொழில் முயற்சியாண்மையையும் திறன் விருத்தியையும் மையமாகக் கொண்ட விரிவான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது.
குறித்த பயிற்சி அமர்வுகளில் ஆகச்சிறந்து விளங்கிய யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த நான்கு தொழில் முனைவோருக்கு இந்நிகழ்வில் பணப் பரிசு வழங்கப்பட்டது.
இதில் பிரபாகரன் கவிசலா முதலாமிடத்தையும், டினே சசிக்குமார் மற்றும் சஜிலா சிவலோகநாதன் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், சிவனேஸ்வரி சிவநாதன் மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டனர்.
நிகழ்வில், வடக்கு மாகாண
மகளிர் விவகார  அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  (காணி) கே.ஸ்ரீமோகனன், வடக்கு மாகாண தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் செ.வனஜா, வைத்தியர் சுலோச்சனா, தொழில் முனைவோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
IMG 20240219 WA0095 IMG 20240219 WA0091 IMG 20240219 WA0093 IMG 20240219 WA0096

Comments are closed.